இலங்கை கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் கத்தோலிக்க தொலைக்காட்சியான VERBUM தொலைக்காட்சியின் 9ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு கடந்த 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர்களான திரு, திருமதி மிலன் டி சில்வா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொழும்பு வத்தளை புனித அன்னம்மாள் ஆலயத்தில் நன்றிதிருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலியை குருநாகல் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஹெரல்ட் அன்ரனி அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
VERBUM தொலைக்காட்சியின் தமிழ் நிகழ்ச்சிகளில் யாழ். மறை அலை தொலைக்காட்சியினால் யாழ். அகவொளி குடும்ப நல நிலையத்திலிருந்து வழங்கப்படும் நாளாந்த திருப்பலி வார நாட்களில் தினமும் மாலை 4.00 மணிக்கு ஒளிபரப்பாகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin