புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிய தொழில்நுட்பக்கூடம்

மார்ச்,20,2018 யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிய தொழில்நுட்பக்கூடம் நேற்று (19.03.2018) திங்கள்கிழமை காலை யனாதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம்

மார்ச்.6. முல்லைத்தீவு மறைகோட்ட இளையோருக்கான தவக்கால தியானம் 4.3.2018 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து வருகைதந்த அருட்திரு ஜெயக்குமார் தலைமையிலான இறைதியான குழுவினர் இத்தவக்கால தியானத்தை நெறிப்படுத்தினர்.

சமூகத்தொடர்பு சாதனங்களும் இளையோரும்

மார்ச்.6. பருத்தித்துறை மறைகோட்ட இளையோருக்கான கருத்தரங்கும் புதிய நிர்வாக தெரிவும் 13.02.2018(செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணிக்கு புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் பருத்தித்துறை மறைகோட்ட இளையோர் ஒன்றியத்தின் இயக்குனர் அருட்திரு மைக்டொனால்ட் தலைமையில் நடைபெற்றது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 49 கர்தினால்கள்–புதிய நூல்

மார்ச்,01,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கியுள்ள 49 கர்தினால்கள், தங்களை திருத்தந்தை தெரிவு செய்தது குறித்தும், திருஅவையின் மாற்றங்கள் குறித்தும் பகிர்ந்துள்ள கருத்துக்களைத் தொகுத்து, புதிய நூல் ஒன்று, பிப்ரவரி 28, இப்புதனன்று வெளியிடப்பட்டுள்ளது.

அருளாளரான திருத்தந்தை 6ம் பால், புனிதராக உயர்த்தப்படுவார்

பிப்.21,2018. நடைபெறும் 2018ம் ஆண்டில், அருளாளரான திருத்தந்தை 6ம் பால், புனிதராக உயர்த்தப்படுவார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களிடம் கூறினார்.