வன்னிப் பிரதேசத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்தினம்

05.ஜீன்.2018 செவ்வாய்க்கிழமை அன்று யாழப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் பெயர்கொண்ட தினம் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாண மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்திரு பெனற் தலைமையில் இந்நிகழ்வுகள்கள் சிறப்பாக நடைபெற்றது.

கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா

04 ஜீன் 2018. யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவை சிறப்பிக்கும் முகமாக 03.06.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நற்கருணைப்பவனி ஒவ்வொரு மறைக்கோட்டங்களில் நடைபெற்றது. யாழ்ப்பாண மறைக்கோட்ட நற்கருணைப்பவனி மாலை 4.00 மணிக்கு சுண்டிக்குளி புனித யுவானியார் ஆலயத்தில்…

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்தினம் – 2018

01.06.2018 வெள்ளிக்கிழமை அன்று யாழப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் பெயர்கொண்ட தினம் புனித மரியன்னை பேராலயத்தில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் அருட்திரு பெனற் தலைமையில் இந்நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. ஆயர் இல்ல வளாக வாயிலிலிருந்து…

குருத்துவம் திருமணம்; கொடையும் மறைபொருளும் நூல் வெளியீடு

மே.30.2018. தேவரட்ணம் செல்வரட்ணம் அடிகளார் எழுதிய குருத்துவம் திருமணம்; கொடையும் மறைபொருளும் என்ற நூல் வெளியீடு 28 மே 2018 அன்று கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக்கல்லூரியில் கல்லூரி அதிபர் ரீ.ஜே. கிருபாகரன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் எல்லாம் முடிந்த இடம் அல்ல, பலரின் தியாகங்களினால் விடுதலைக்கான விதை விதைக்கப்பட்ட இடம்.

19.மே ,2018. முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில், முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவுத் திருப்பலி 18.05.2018 மாலை 5.00 மணிக்கு யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. பா.யோ.ஜெபரட்ணம் தலைமையில் நடைபெற்றது.