மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

தர்மபுரம், பெரியகுளம், பிரமந்தநாறு உழவனூர் பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட நூறு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 01ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.

இளையோருக்கான குறும்படம் தொடர்பான கருத்தரங்கு

வன்னி கியூடெக் நிறுவனத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இளையோருக்கான குறும்படம் தொடர்பான கருத்தரங்கு 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி உருத்திரபுரம் 8ஆம் வாய்க்கால் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆரோபணம் இளைஞர் இல்லத்தில் நடைபெற்றது.

யாழ் ரெனிஸ் வலைப்பந்து கழகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட ரெனிஸ் தினம்

யாழ் ரெனிஸ் வலைப்பந்து கழகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட ரெனிஸ் தினம் 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

தேசிய திருவிவிலிய அறிவுப்போட்டி

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய திருவிவிலிய அறிவுப்போட்டியில் அளம்பில் பங்கிலிருந்து பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 23ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. உதவிப்பங்குத்தந்தை அருட்திரு எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…