மாதகல் புனித லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா

இளவாலை மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள மாதகல் புனித லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா 13ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது.

சின்னத்தீவு புனித செபஸ்ரியார் ஆலய திருவிழா

இரணைத்தீவில் அமைந்துள்ள சின்னத்தீவு புனித செபஸ்ரியார் ஆலய திருவிழா கடந்த மாதம் 28ஆம் 29 ஆம் திகதிகளில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

யாழ்ப்பாண மறைமாவட்டத்திற்கு புதிய குருக்கள்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தை சேர்ந்த கிளறீசியன் சபை திருத்தொண்டர்களான ஆன்றோய் அரவிந், டொனால் கிறிஸ்டி மற்றும் ஜோன்சன் ஆகியோர் 16ம் திகதி கடந்த புதன்கிழமை குருக்களாக திருநிலைப் படுத்தப்பட்டுள்ளனர்.

உடுப்புக்குளம் குழந்தை யேசு ஆலய 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா

உடுப்புக்குளம் குழந்தை யேசு ஆலயம் ஆரம்பமாகியதன் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வுகளும் ஆலயத்திருவிழாவும் 12ம் திகதி கடந்த சனிக்கிழமை அங்கு இடம்பெற்றது.

மூதாளரை கௌரவித்து மகிழ்வுட்டும் நிகழ்வு

மல்வம் திருக்குடும்ப ஆலய பிரதேசத்தில் வாழ்ந்துவரும் 70 வயதிற்கு மேற்பட்ட மூதாளரை கௌரவித்து மகிழ்வுட்டும் நிகழ்வு 13ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.