யாழ். மறைமாவட்ட குருவாகிய அருட்திரு கருணாரட்ணம் அவர்களின் நினைவுநாள்

2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வன்னி பெருநிலப்பரப்பின் வவுனிக்குளம் அம்பாள்புரத்தில் அரச படையினரின் ஆழ ஊடுருவும் படையணியால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலினால் படுகொலை செய்யப்பட்ட யாழ். மறைமாவட்ட குருவாகிய அருட்திரு கருணாரட்ணம் அவர்களின் நினைவுநாள் 20ஆம் திகதி கடந்த…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்து மௌன அஞ்சலியும் ஆராதனையும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்து கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் குண்டுதாக்குதல் இடம்பெற்ற தினமாகிய 21ஆம் திகதி காலை 8.45 மணிக்கு 2நிமிட மௌன அஞ்சலியும் தொடர்ந்து கொழும்பு பேராயர் மல்கம் காடினல் ரஞ்சித் அவர்களின் தலைமையில்…

அமைதிப் பிரார்த்தனை

நாட்டில் ஏற்பட்டு வரும் அசாதாரண சூழலால் மக்கள் பெரிதும் நெருக்கீடுகளை எதிர் கொண்டு வருவதை கருத்திற் கொண்டு கரித்தாஸ் தேசிய நிலையத்தின் ஏற்பாட்டில் பிராந்திய ரீதியாக மக்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்ட அமைதிப் பிரார்த்தனை யாழ். மறைமாவட்டத்தில் இம்மாதம் 9 ஆம் திகதி…

உயிர்ப்பு ஞாயிறு வெற்றிக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி – புதுக்குடியிப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய பழைய மாணவர்களுக்கான உயிர்ப்பு ஞாயிறு வெற்றிக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

மென்பந்து கிரிக்கெட் மற்றும் கிளித்தட்டு போட்டிகள் – யாழ் குருநகர்

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு விழாவினை சிறப்பிக்கும் முகமாக யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் மென்பந்து கிரிக்கெட் மற்றும் கிளித்தட்டு போட்டிகள் என்பன 17 ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்தன.