மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு

கிறிஸ்தவமத அலுவல்கள் திணைக்களமும் யாழ். மறைக்கல்வி நடுநிலையமும் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு 22ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

முல்லைத்தீவு சிலாவத்தை பங்கின் புதிய பங்குத்தந்தையாக அருட்தந்தை ஜெறி குயின்ரஸ்

முல்லைத்தீவு சிலாவத்தை பங்கின் புதிய பங்குத்தந்தையாக நியமனம்பெற்ற கப்புசியன் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜெறி குயின்ரஸ் அவர்கள் கடந்த 09ஆம் திகதி தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வு முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.

மானிப்பாய் புதுமடம் கர்த்தர் ஆலய புனித கார்மேல் அன்னை வருடாந்த திருவிழா

மானிப்பாய் புதுமடம் கர்த்தர் ஆலய புனித கார்மேல் அன்னையின் வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 13ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 15ஆம்…

நவாலி புனித பேதுரு பவுல் ஆலய வருடாந்த திருவிழா

நவாலி புனித பேதுரு பவுல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 29ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 24ஆம் திகதி சனிக்கிழமை…

யாழ். மறைமாவட்ட குருவும் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் முன்நாள் இயக்குனருமாகிய அருட்தந்தை பீற்றர் அவர்கள் 19ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

யாழ். மறைமாவட்ட குருவும் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் முன்நாள் இயக்குனருமாகிய அருட்தந்தை பீற்றர் அவர்கள் 19ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் யாழ். மறைமாவட்டத்தின் யாழ் புனித மரியன்னை பேராலயம் மற்றும் மாரீசன்கூடல் பங்குகளின் உதவிப்பங்குத்தந்தையாகவும் மிருசுவில், குமிழமுனை,…