இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜீலி சங் அவர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜீலி சங் அவர்கள் கடந்த வாரம் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் சமய நல்லிணக்கம்,…

இலங்கை திருச்சபையால் முன்னெடுக்கப்பட்ட கண்டன எதிர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு மயிலத்தமடு பிரதேசத்தில் கடந்த மாதம் 22ஆம் திகதி பல்சமய தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக பௌத்த மதகுருமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தலை கண்டித்து முன்னெடுக்கப்பட்ட கண்டன எதிர்ப்பு போராட்டம் 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இலங்கை திருச்சபையின்…

யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வெளி விழா நிகழ்வு

யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வெளி விழா நிகழ்வு ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில் 2ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி உருத்திரபுரம் பற்றிமா அன்னை ஆலயத்தில் ஒன்றுகூடிய மரியாயின்…

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட கடற்கரை சுத்தப்படுத்தலும் மரநடுகை நிகழ்வும்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தில் யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட கடற்கரை சுத்தப்படுத்தலும் மரநடுகை நிகழ்வும் 29ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி பிரதேசத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விழிப்புணர்வு கருத்துரையும்…

யாழ். திருக்குடும்பக் கன்னியர்மடத் தேசிய பாடசாலையின் ஆங்கில தின விழா

யாழ். திருக்குடும்பக் கன்னியர்மடத் தேசிய பாடசாலையின் ஆங்கில தின விழா 29ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக ஆங்கில இலக்கியத் துறை சிரேஸ்ட விரிவுரையாளர்…