யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும்

யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் 04ஆம் திகதி சனிக்கிழமை யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெற்றது. பேரவையின் புதிய தலைவராக வணக்கத்துக்குரிய கிருபானந்த குருக்களும் இணைத்தலைவர்களாக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் குருத்துவக் கல்லூரியில் இரத்ததான முகாம்

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் குருத்துவக் கல்லூரியின் புனித அன்னை தெரேசா சமூக சேவை குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 07ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை குருத்துவக்கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்குருதிக்கொடை நிகழ்வில் குருமட மாணவர்கள் 36 பேர் கலந்து…

மல்வம் பங்கில் இரத்ததான முகாம்

மல்வம் பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்வம் திருக்குடும்ப ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஜஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது. ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் கருப்பொருளில் பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

மன்னார் மறைமாவட்ட கரித்தாஸ் வாழ்வுதய சமூக அறநெறி நிறுவனம் மற்றும் சமூக தொடர்பு அருட்பணி நிலையத்திற்கு புதிய இயக்குநர்கள்

மன்னார் மறைமாவட்ட கரித்தாஸ் வாழ்வுதய சமூக அறநெறி நிறுவனத்தின் புதிய இயக்குநராக அருட்தந்தை அருள்ராஜ் குருஸ் அவர்கள் கடந்த 30ஆம் திகதி சனிக்கிழமை பொறுப்பேற்றுள்ளார். மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்ணான்டோ அவர்களின் முன்னிலையில் அருட்தந்தை அவர்கள் பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டதுடன்…

புனித வியாகுல அன்னை மரியின் ஊழிய சபை அருட்சகோதரிகளால் மாணவர்களுக்கான மாலைநேர ஆங்கில வகுப்புக்கள்

இந்தியாவிலிருந்து வருகைதந்து தர்மபுரம் பங்கில் பணியாற்றிவரும் புனித வியாகுல அன்னை மரியின் ஊழிய சபை அருட்சகோதரிகளால் அங்கு முன்னெடுக்கப்படும் மாணவர்களுக்கான மாலைநேர ஆங்கில வகுப்புக்கள் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. தர்மபுரம் புனித சவேரியார் மற்றும் விசுவமடு புனித இராயப்பர் ஆலயங்களில் திங்கள் முதல்…