திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை மற்றும் இலிங்கநகர் பங்கு பீடப்பணியாளர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட பயிற்சிப் பட்டறை கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் நடைபெற்றது.

உவர்மலை பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட பீடப்பணியாளர் இயக்குனர் அருட்தந்தை சுதர்சன் அவர்கள் வளவாளராகக் கலந்து மாணவர்களை நெறிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் 27 வரையான பீடப்பணியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin