வத்திக்கான் உரோமாபுரியில் அமைந்துள்ள புனிதர்களின் திருப்பண்ட பேராயத்திலிருந்து யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் வழிகாட்டலில் பாசையூர் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்டத்திற்கு எடுத்துவரப்பட்ட புனித அந்தோனியாரின் திருப்பண்டம் மக்களின் வணக்கத்திற்காக பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் வைக்கப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வு பங்குத்தந்தையின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் திருப்பண்டத்தை ஆலயத்தில் வைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

 

By admin