போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.

‘போதைப்பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது சந்ததியினரையும் பாதுகாப்போம்’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பேரவை தலைவர் சிவ ஸ்ரீ கிருபானந்த குருக்கள், அருட்தந்தை ராஜ்குமார், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், யாழ்ப்பாணம் நாக விகாரை விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர், மௌலவி சுபியான், மத தலைவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

 

 

By admin