மானிப்பாய் புனித அன்னாள் ஆலயப் பீடப்பணியாளர்களும் புதுமடம் கர்த்தர் ஆலயப் பீடப்பணியாளர்களும் இணைந்து, உட்கார்ந்து கல்விகற்க கதிரை இல்லாத மூன்று மாணவர்கள் உள்ள குடும்பம் ஒன்றுக்கு நான்கு கதிரைகளை அன்பளிப்புச் செய்துள்ளார்கள்.
 
இந்நிகழ்வு இன்று 17ஆம் திகதி சனிக்கிழமை மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் வழிகாட்டலில் பீடப்பணியாளர்கள் தாங்கள் மாதாந்தம் சேகரித்த சந்தாப்பணத்திலிருந்து பெறப்பட்ட ஒரு தொகை நிதியைக்கொண்டு இக்கதிரைகளை கொள்வனவு செய்து தேவையில் உள்ள மாணவர்களுக்கு வழங்கியுள்ள இச்செயற்பாடு பலரது பாராட்டினையும் பெற்றுக்கொண்டுள்ளது.

By admin