தேசிய வின்சன் டி போல் சபை மாதந்த ஒன்றுகூடல் 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தேசிய வின்சன் டி போல் சபை இயக்குனர் அருட்தந்தை யூட்ராஜ் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வின்சன் டி போல் சபையினரால் முன்னெடுக்கப்பட்ட முன்னெடுக்கப்படவுள்ள கடந்தகால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், தேசிய தேசிய வின்சன் டி போல் சபை தலைவர் ஏனைய மறைமாவட்டங்களின் மத்தியசபைத் தலைவர்கள், பிரதிநிதிகளெப் பலரும் கலந்து கொண்டனர்.

By admin