இல்லற வாழ்வில் இணைந்து 10 வருடங்களுக்குட்பட்ட தம்பதியினருக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த 3ஆம் திகதி சனிக்கிழமை வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் அகவொளி குடும்ப நல நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
 
வட்டக்கச்சி பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வை யாழ். அகவொளி குடும்பநல நிலைய இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்களோடு இணைந்து அமலமரிதியாகிகள் சபை அருட்தந்தை றமேஸ் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.
 
இந்நிகழ்வில் வட்டக்கச்சி பங்கிலுள்ள ஆலயங்களிலிருந்து 15வரையான தம்பதியினர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin