யாழ். திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் கா.பொ.த உயர் தரப் பரீட்சையில் நாடகமும் அரங்கியலும் செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட நாடக பயிற்சிப் பட்டறை 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.

திருமறைக் கலாமன்ற கலைஞர்களான திரு. ஜோன்சன் ராஜ்குமார், திரு. தைரியநாதன் யஸ்ரின் ஜெலூட், திரு. ஜெயகாந்தன் திருமதி. வைதேகி ஆகியோர் வளவாளர்களாக கலந்து நெறிப்படுத்திய இப்பயிற்சிப் பட்டறையில் 50 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தார்கள்.

By admin