பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தநாள் வழிபாடுகள் கடந்த 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன.
தினமும் 4:30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆயத்தநாள் வழிபாடுகள் இடம்பெற்றுவருவதுடன் 10ஆம் திகதி மாலை 05:00 மணிக்கு யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நற்கருணை விழா திருப்பலியும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07:00 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.

By admin