குருநகர் புனித யோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட புனித யோசப்வாஸ் திருவிழா கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து அன்று இரவு இளையோருக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.
அத்துடன் இந்நாளை சிறப்பிக்குமுகமாக இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் வருகின்ற 8ஆம் திகதி வியாழக்கிழமை குருநகர் கலையரங்கில் சிறப்பு கலைநிகழ்வுகள் நடைபெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin