யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ‘வெள்ளியில் ஞாயிறு’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை கடந்த 10 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்று வருகின்றது.

பிரமாண்டமான அரங்க அமைப்பு, காட்சியமைப்பு, இசையமைப்பு, ஒலி, ஒளி போன்றவற்றுடன் அரங்கிலும், அரங்கப் பின்னணியிலும் இருநூறுக்கும் அதிகமான கலைஞர்களின் பங்கேற்புடன் நான்கு நாட்கள் மேடையேற்றப்படும் இத்தவக்கால ஆற்றுகையில் ஆயிரக்கனக்கானோர் பக்திபூர்வமாக இணைந்துவருவதடன் இவ்வாற்றுகை 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாளைய தினம் இறுதிக்காட்சியுடன் நிறைவடையவுள்ளது.

“வெள்ளியில் ஞாயிறு” திருப்பாடுகளின் காட்சி முதன் முதலாக 2010ஆம் ஆண்டிலும், அதனைத் தொடர்ந்து 2018 ஆண்டிலும் மேடையேற்றப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டதுடன் மன்ற பிரதி இயக்குநர் திரு. யோன்சன் ராஜ்குமார் அவர்களின் நெறியாள்கையில் தற்போது மீண்டும் மேடையேற்றப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin