குறுந்திரைப்பட உருவாக்கத்தில் ஆர்வமுள்ளவர்களின் திறன்களை வெளிக்கொணரும் நோக்கில் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் குறும்பட போட்டியில் பங்கேற்றவுள்ள தமிழ்மொழி மூலமான போட்டியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை கடந்த மாதம் 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஊடகமைய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஈழத்து திரைப்பட இயக்குநரும் நடிகருமான திரு. மதிசுதா அவர்கள் வளவாளராக கலந்து கருத்துரைகள், செய்முறை பயிற்சிகள், மற்றும் விளக்கப்படங்கள் ஊடாக பங்கேற்பாளர்களை நெறிப்படுத்தினார்.

By admin