நெடுந்தீவு பங்கின் புனித டொன் பொஸ்கோ இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட வீதி காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை தியானம் 11ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களில் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானம் புனித யாகப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகி செபநாயகபுரம் வியாகுல அன்னை கெபியை சென்றடைந்தது அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் பங்குமக்கள், பிற சமய மக்களென 1000 ற்கும் அதிகமானவர்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.