யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் கடந்த 31ஆம் திகதி திங்கட்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தியானத்தில் திருச்செபமாலை, மூன்று நிலைகளை உள்ளடக்கிய சிலுவைப்பாதை தியானம், ஒப்புரவு அருட்சாதனம், நற்கருணை ஆராதனை என்பன இடம்பெற்றன.

சிலுவைப்பாதை தியான உரைகளை கிளறேசியன் சபை அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் அவர்கள் வழங்கினார். தவக்கால தியானத்தை தொடர்ந்து குருக்களுக்கான கூட்டம் மன்ற தலைவர் அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 100க்கும் அதிகமான குருக்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin