யூபிலி ஆண்டு தவக்கால சிறப்பு நிகழ்வாக திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பங்குமக்களுக்கான ஆன்மீக புதுப்பித்தல் தியானம் கடந்த 12ஆம் திகதி ஆரம்பமாகி 16ஆம் திகதி வரை அங்கு நடைபெற்றது.

பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திருக்குடும்ப சபை அருட்சகோதரிகளின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இல்ல தரிசிப்பு, குடும்பங்களின் தரவுகள் சேகரிப்பு என்பவற்றுடன் சிறப்பு கருத்தமர்வுகளும் இடம்பெற்றன.

சிறுவர்கள், பெற்றோர்கள், இளையோர்களுக்கென முன்னெடுக்கப்பட்ட இக்கருத்தமர்வுகளில் கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன.

By admin