யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவும் கரவெட்டி பங்கு இளையோரும் இணைந்து முன்னெடுத்த சிலுவையின் பாதையில் தவக்கால காட்சிப்படுத்தல் தியானம் கடந்த 20ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் மற்றும் நிர்வாகக்குழு அங்கத்தவர்களுடன் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள், இறைமக்கள், இந்துமத சகோதரர்கள் பங்குபற்றியிருந்தனர்.