யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவும், கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றியம் இணைந்து முன்னெடுத்த கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம் கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி ஆரோபணம் மாணவர் விடுதியில் நடைபெற்றது.
கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களின் வழிகாட்டலில் மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்கள் கலந்து தியான உரை, செபமாலை, சிலுவைப்பாதை தியானம், குழு செயற்பாடு என்பவற்றின் ஊடாக இளையோரை நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் மறைக்கோட்ட புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றதுடன் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் மற்றும் நிர்வாகக்குழு அங்கத்தவர்களும் பங்குபற்றியிருந்தனர்.
தொடர்ந்து அன்று மாலை வட்டக்கச்சி நாவலர் நகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவினரால் யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வான “சிலுவையோடு பயணம்” சிலுவைப்பாதை காட்சிப்படுத்தல் தியானமும் நடைபெற்றது.

By admin