யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தமர்வு 26ஆம் திகதி கடந்த புதன்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்ல மண்டபத்தில் நடைபெற்றது.
நிறுவன இயக்குனர் அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களான திரு. டுபின்சன், திரு. ரவிமோகன் மற்றும் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் செல்வி. கிறேஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள் ஊடாக மாணவர்களை நெறிப்படுத்தினார்கள்.
இக்கருத்தமர்வில் 100 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர். இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையை இலங்கை கரித்தாஸ் செடெக் நிறுவனத்தினூடாக கரித்தாஸ் கொரியா நிறுவனம் வழங்கியிருந்தது.