இயக்கச்சி பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இவ்வாலய கட்டுமானப்பணிகள் கடந்த ஆடி மாதம் பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் வழிநடத்தலில் ஆரம்பமாகி தற்போது நிறைவடைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

By admin