யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம் 28ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யூபிலி ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை யேசுரட்ணம் மற்றும் அருட்தந்தையர்கள், மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு உறுப்பினர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin