கட்டைக்காடு பங்கின் புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 20ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
16ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை சுன்னாகம் பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.