திருச்சிலுவை கன்னியர் உலகளாவிய தலைவி அருட்சகோதரி டொறினா சனோனி மற்றும் கன்னியர் மட ஆசிய ஆலோசகர் அருட்சகோதரி றோஸ் போல் ஆகியோர் இலங்கை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்டத்திற்கு வருகைதந்து பல்வேறு பணித்தளங்களில் பணியாற்றும் அருட்சகோதரிகளின் குழுமங்களை சந்தித்தனர்.

கொழும்புத்துறை புனித வளனார் முதியோர் இல்லம், திருச்சிலுவை கன்னியர் வைத்தியசாலை, தாதியர் பயிற்சி கல்லூரி, யாழ். புனித மரியன்னை பேராலயம், குருநகர் சுகநல விடுதி, எழுதுமட்டுவாள் சுகநல விடுதி, பரந்தன் சுகநல விடுதி ஆகியவற்றுக்கு சென்று அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன் கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களையும் ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

By admin