முல்லைத்தீவு மறைக்கோட்ட குருக்களுக்கான கூட்டம் 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை சிலாவத்தை புனித அன்னம்மாள் ஆலயத்தில் நடைபெற்றது.

மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து பங்குகள் ரீதியாக சுற்றுச்சூழல் பராமரிப்பு குழுமங்கள் அமைப்பதன் அவசியம் தொடர்பாகவும் யூபிலி ஆண்டு பற்றியும் விளக்கவுரை வழங்கினார்.

தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் மறைக்கோட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

 

By admin