பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. அந்தோனிப்பிள்ளை அகஸ்டின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கழகத்தின் கடந்தகால செயற்பாடுகள் மற்றும் யூபிலி ஆண்டை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள ஆன்மிக நிகழ்வுகள் தொடர்பாக கலந்துரையடப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை மவுலிஸ், யாழ். மறைமாவட்ட பொதுநிலையின்ர் ஆணைக்குழு செயலாளர் திரு. அலெக்ஸ் அமலரட்ணம் ஆகியோர் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

By admin