கிளிநொச்சி மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவைக்கூட்டம் கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி மேய்ப்புப்பணி மண்டபத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து யூபிலி ஆண்டுக்கான ஆயத்தங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக கருத்துரை வழங்கினார்.

தொடர்ந்து அரசியல் ஆய்வாளர் திரு. செல்வின் இரோனியஸ் அவர்களால் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் தேர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றிய அரசியல் ஆய்வும் கலந்துரையாடலும் இடம்பெற்றதுடன் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்கள் கலந்து மேய்ப்புப்பணி பேரவை தொடர்பாக கருத்துரையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், மறைக்கோட்ட ஆணைக்குழு அங்கத்தவர்கள், பங்கு பிரதிநிதிகளென 80 பேர் கலந்துகொண்டனர்.

இவ்அமர்வு இவ் ஆண்டிற்கான இரண்டாவது மேய்ப்புப்பணி பேரவை அமர்வு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin