யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள் கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி மாணவர்களுக்கான விளையாட்டுக்களும் பரிசளிப்பும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

அத்துடன் நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு நோய் விழிப்புணர்வு கருத்தமர்வும் அன்றைய தினம் அங்கு நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் கலந்து இக்கருத்தமர்வை நெறிப்படுத்தியிருந்தனர்.

By admin