மன்னார் மடுமாதா சிறிய குருமட வருடாந்த திருவிழாவும் புதிய அதிபர் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வும் கடந்த 12ஆம் திகதி சனிக்கிழமை மடுமாதா சிறிய குருமடத்தில் நடைபெற்றன.

குருமட முன்னாள் அதிபர் அருட்தந்தை வசந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள்; கலந்து திருநாள் திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இத்திருப்பலியில் அருட்தந்தை நெவின்ஸ் யோகராஜ் பீரிஸ் அவர்கள் குருமடத்தின் புதிய அதிபராக தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வும் இடம்பெற்றது.

திருப்பலியை தொடர்ந்து கலைநிகழ்வுகளும் நற்கருணை ஆராதனையும் இடம்பெற்றதுடன் அன்றைய நாளை சிறப்பித்து மாலை குருக்கள் மற்றும் குருமட மாணவர்களுக்கிடையிலான சிநேகபூர்வ காற்பந்தாட்ட போட்டியும் நடைபெற்றது.

By admin