மன்னார் மறைமாவட்டத்தின் வவுனியா மறைக்கோட்ட மற்றும் மடு மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் அன்பிய பணியாளர்களுக்கான வலுவூட்டல் பாசறை நிகழ்வுகள் கடந்த 12ஆம் 17ஆம் திகதிகளில் நடைபெற்றன.

மன்னார் மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாளன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 12ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் வவுனியா மறைக்கோட்ட பணியாளர்களுக்கு நடைபெற்ற நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜெயபாலன், கிளறேசியன் சபை அருட்தந்தை வரதன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து நிகழ்வை நெறிப்படுத்தினர்.

நற்கருணை ஆராதனை, கருத்துரைகள், விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள், குழுச்செயற்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கிய இந்நிகழ்வில் வவுனியா மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அன்பிய பணியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

அத்துடன் 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மடு மறைக்கோட்ட அன்பிய பணியாளர்களுக்கு குஞ்சுக்குளம் அங்கமத்து அன்னை ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் அருட்தந்தை யூட் குருஸ், அருட்சகோதரர் தர்சன் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டதுடன் மடு மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 70 அன்பிய பணியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin