திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூதுப் பிரதிநிதி பேரருட்தந்தை பிரையன் உடக்குவே அவர்கள் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த 09ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் பேரருட்தந்தை பிரையன் உடக்குவே அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதியிடம் கையளித்தார்.

By admin