யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வெளிவிழா நிகழ்வு ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 12ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

முழங்காவில் வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் காலை 9.00 மணிக்கு ஒன்றுகூடிய மரியாயின் சேனையினர் அங்கிருந்து செபமாலைப் பேரணியாக இரணைமாநகர் செபமாலை அன்னை ஆலயத்தை சென்றடைந்து அங்கு நடைபெற்ற திருப்பலியில் பங்குபற்றினர்.

திருப்பலியைத் தொடர்ந்து உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு அங்கு இடம்பெற்றதுடன் யாழ். மறைமாவட்டத்தின் எல்லா இடங்களிலிருந்தும் வருகைதந்த 700 வரையான மரியாயின் சேனையினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

By admin