மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி வஞ்சியன்குளம் பங்கின் துணை ஆலயமான மாதிரிகிராமம் புனித வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி வங்காலை புனித அன்னாள் ஆலயத்தை சென்றடைந்து அங்கு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.

இப்பேரணியில் மன்னார் மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 4000 வரையான மரியாயின் சேனை அங்கத்தவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin