இலங்கை வின்சென்ட் டி போல் சபையினருக்கான தேசிய கூட்டமும் அதன் செயற்குழுவுக்கான புதிய நிரிவாகத்தெரிவும் கடந்த 05ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு கிராண்ட் பாஸ் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யூட்ராஜ் அவர்களின் வழிநடத்தலில் சபை தலைவி சகோதரி செறில் சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய வின்சென்ட் டி போல் சபைக்கு பொறுப்பான ஆயர் பேரருட்தந்தை மக்ஸ்வெல் டி சில்வா கலந்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலியை தொடர்ந்து தேசிய சபையின் புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது.

தேசிய சபையின் புதிய தலைவராக கொழும்பு மறைமாவட்டத்தை சேர்ந்த சகோதரர் அழகக்கோன் அவர்களும் உபதலைவராக யாழ். மறைமாவட்ட மத்திய சபை தலைவி சகோதரி மரியநாயகி அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட வின்சென்ட் டி போல் சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும் 39 உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்.

By admin