குளமங்கால் பங்கிற்குட்பட்ட வறுத்தலைவிளான் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த அற்புதக் குழந்தை இயேசு ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்ஆலய திறப்புவிழா 10ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.

33வருடங்களுக்கு முன்பு வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு இடங்களில் குடியேறி பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு செல்லமுடியாமல் வறுத்தலைவிளான் பகுதியில் 2017ஆம் ஆண்டு குடியேறிய தையிட்டியை சேர்ந்த 19 குடும்பங்கள் இணைந்து இவ்வாலயத்தை கட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin