யாழ்ப்பாணம் றக்கா விதியில் அமைந்துள்ள புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழாவும் அதனுடன் இணைந்த ஆலய பொன்விழா நிகழ்வும் பங்குத்தந்தை அருட்தந்தை ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

கடந்த மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 05ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலி நிறைவில் ஆயர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப்பு அவர்களின் நினைவாக ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட மண்டபம் திறந்துவைக்கப்பட்டதுடன் திருவிழா அன்று மாலை புனிதையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin