யாழ்ப்பாணம் டேவிட் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வாணி விழா 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி. மேரி அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வழிபாடும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநர் திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்கள் கலந்து வாணிவிழாவின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் மன்ற அங்கத்தவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin