தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட வூசோ குத்துச் சண்டை போட்டி கடந்த 4, 5, 6 ஆம் திகதிகளில் கண்டி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றிய புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி செல்வி ஜீட் வசீகரன் டிவோன்சி அவர்கள் 18வயதுக்குட்பட்ட 60-65 கிலோ எடைப்பிரிவு போட்டியில் முதலாமிடத்தை பெற்று தங்க பதக்கத்தினையும், முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவன் செல்வன் நாகேஸ்வரன் கோபிகன் ஆண்களுக்கான 20 வயதுக்குட்பட்ட 70-75 கிலோ எடைப்பிரிவில் மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கல பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன் தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட தைகொண்டோ குத்துச்சண்டை போட்டி கடந்த மாதம் 28,29,30 ஆம் திகதிகளில் இரத்தினபுரி புதிய நகர உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றிய செல்வி ஜூட் வசீகரன் டிவோன்சி 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தைக்வொண்டோ போட்டியில் 59-63 கிலோ எடைப்பிரிவில் 03ஆம் இடத்தைப்பெற்று வெண்கல பதக்கத்தினை பெற்றுள்ளார்.

By admin