மானிப்பாய் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் வழிபாடும் தொடர்ந்து ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் நோர்வே நாட்டிலிருந்து பாடசாலையின் பழைய மாணவர் திரு. சந்தியாம்பிள்ளை சைமன் அவர்கள் அனுப்பிவைத்த வாழ்த்துச்செய்தி வாசிக்கப்பட்டதுடன் ஆசிரியர்களுக்கான அன்பளிப்புக்களும் வழங்கிவைக்கப்பட்டன.

By admin