செம்பியன்பற்று அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் நூற்றாண்டு நிகழ்வு கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடசலை அதிபர் திரு. கணேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு, நினைவுமலர் வெளியீடு, கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் திரு. கனகசபை சத்தியபாலன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் திரு. அருணகிரி வினோராஜ் மற்றும் தாளையடி பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் ஆகியோர் சிறப்பு விருந்தனர்களாகவும் கலந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

By admin