மட்டக்களப்பு மறைமாவட்டம் கல்முனை புனித வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

03ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 05ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை அருட்தந்தை அலெக்ஸ் றொபட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலி நிறைவில் குருத்துவ வாழ்வில் வெள்ளிவிழாவை கொண்டாடும்அருட்தந்தை அலெக்ஸ் றொபட் அவர்களுக்கான கௌரவிப்பும் அதனுடன் இணைந்து ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பங்கிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.

By admin