இந்நியாவில் பணியாற்றும் ஏர்காடு மாகாண புனித கபிரியேல் மொன்பேட் துறவற சபை அருட்சகோதரர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிவாழ்வில் வைரவிழா மற்றும் வெள்ளிவிழா காணும் அருட்சகோதரர்களுக்கான யூபிலி நிகழ்வு 02ஆம் திகதி கடந்த புதன்கிழமை இந்தியாவின் ஏர்காட்டில் நடைபெற்றது.

சபையின் ஏர்காடு மாகாண முதல்வர் அருட்தந்தை ஜோன்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சேலம் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அருட்செல்வன் இராயப்பா அவர்களின் தலைமையில் திருப்பலியும் மாகாண முதல்வர்கள் மற்றும் பல்வேறு மாகாணங்களை சேர்ந்த குருத்துவ வெள்ளிவிழா காணும் அருட்சகோதரர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை பீற்றர் றெமிஜியஸ் மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆகியோர் கலந்து வாழ்த்துச்செய்திகளை வழங்கினர்.

By admin