யாழ்ப்பாணம் புனித மரியன்னை பாலர் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு 30ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை பேராலய வளாகத்தில் நடைபெற்றது.

முள்பள்ளி ஆசிரியர் திருமதி. நிலான்குமார் தமிழ்ச்செல்வி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் காப்பாளர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். கல்விவலய முன்னாள் உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. கந்தையா விமலாநந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் சித்த ஆயுள்வேத வைத்திய அதிகாரிகளான திருநாவுக்கரசு ராகுலன் மற்றும் தர்சினி சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் யாழ். கல்விவலய முன்பள்ளி இணைப்பாளர் புனிதசீலன் தர்சின் அவர்கள் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்விளையாட்டு நிகழ்வில் மாணவர்களின் தடகள விளையாட்டுக்கள், உடற்பயிற்சி என்பவற்றுடன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.

By admin