அமரர் தியோனிஸ் ஞானமணி அன்ரனி அவர்களின் நினைவாக தர்மபுரம் நம்பர் 01 பாடசாலைக்கு முன்பாக புதிதாக அமைக்கப்பட்டுவந்த வீதியோர நிழற்குடை திறப்புவிழா 02ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட கரித்தாஸ் வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து புதிய நிழற்குடையை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

தொடர்ந்து முதியோர்களுக்கான அன்பளிப்புக்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களும் கலந்துகொண்டார்.

By admin